Sunday, 17 March 2013

பங்குனி உத்திர வழிபாடு


மாற்றங்கள் அருளும் பங்குனி உத்திர வழிபாடு

மகேசனால் உண்டான மாதங்கள் பல வந்தாலும் பங்குனியில் வரும்
உத்திரநட்சத்திரம் மகத்துவம் வாய்ந்த இந்துக்களுக்குரிய அற்புத
திருநாளாகும்.ஏனெனில் இந்த அற்புத நாளில்தான் சிவன் பார்வதி திருமண
கயிலாயத்தில் நடைபெற்றதாக புராணங்கள் உரைக்கின்றன. தமிழ் கடவுளாம் ஸ்ரீ
முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திர திருநாள் தமிழகமெங்கும்
கொண்டாடப்படுகிறது. மங்கலகரமான பங்குனி உத்திர திருநாளில்தான்
முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணமும், ரங்கநாதர் ஆண்டாள்
திருமணம்,தேவேந்திரன் இந்திராணி திருமணம் ,பிரம்மா சரஸ்வதி திருமணம்
,தசரதபுதல்வர்கள் திருமணம் ஆகிய திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள்
கூறுகின்றன. இறைவனுக்கே திருமணம் நடந்த பங்குனி உத்திர திருநாள் இந்த
வகையில் விஷேசமானது. மற்றொரு வகையில் சில தெய்வ அவதாரங்கள் இந்த இனிய
நாளில் அவதரிதிருக்கிறனர் . அவர்கள் வள்ளி,ஐயப்பன்,அர்ஜுனர் ஆகியோராவர்
. திருமுருகப்பெருமானின் திருக்கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று
மிகுந்த விஷேசமான நாளாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் வள்ளி
தெய்வானை திருக்கல்யாணம் , மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் ஆகிய
திருத்தலங்களில் விஷேச நிகழ்வுகள் நடைபெறும் . ரதியின் வேண்டுதலுக்காக
சிவபெருமான் மன்மதனை உயிர்பித்த நாளாகவும் பங்குனி உத்திரத்தை புராணம்
போற்றுகிறது ,இந்த அரிய நிகழ்வையே வடமாநிலத்தோர் ஹோலிப்பண்டிகையாக
கொண்டாடப்படுகிறது. விஷேசபலன்கள் : திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும்
விரதமிருந்து ஏதேனும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் ,சிவாலயங்களில்
வழிபட திருமணம் ,குழந்தைப்பேறு போன்ற மங்கலங்கள் உங்கள் வாழ்வில்
நடைபெறும் . முடிவுரை : வருகிற 26.3.13 முருகருக்குரிய செவ்வாய்கிழமை
நாளில் பங்குனி உத்திர திருநாள் வருகிறது. அடுத்த நாள் பெளர்ணமி திதியும்
வருகிறது. தமிழ் கடவுளாம் முருப்பெருமானையும் சிவனையும் வணங்கி உங்கள்
வீட்டில் மங்கலங்கள் உண்டாக வாழ்த்துக்கள் . மறவாமல் முருகபெருமானுக்கு
பிடித்த செவ்வரளி மாலை நெய் தீபத்துடன் சென்று முருகப்பெருமான் அருள்
பெறுங்கள் .நன்றி

No comments:

Post a Comment