Thursday, 28 February 2013

சில மறைந்திருக்கும் உண்மை கோட்பாடுகள்....

சில மறைந்திருக்கும் உண்மை கோட்பாடுகள்....
இந்து மதமும் பகவத் கீதையின் கூற்று: 

நீயும் உன் குடும்பத்தாரும் இறைவனின் வழிபாட்டுக்காக வரும் நல்ல நாட்களில் விரதம் இரு! அப்போது உன் வீட்டில் அன்றைய தினம் சமையலுக்கு (சைவ உணவு) தேவைப்படும் உணவுப்பொருட்களை நீயும் உன் சுற்றத்தாரும் ஒரு கோவிலில் அந்த உணவுப்பொருட்களை சமைத்து அன்று மாலை ஏழை எளிய மக்களுடம் அந்த உணவை ஒரு நேரம் மட்டும் சேர்ந்து சாப்பிடு இதுதான் விரதம்!




இசுலாம் சொல்கிறது:

நீ இசுலாத்தின் கடமைகளாக வரும் நல்ல நாட்களில் பகல் நேரம் சாப்பிடாமல் இரவு வேளை மட்டும் சாப்பாடு சமைத்து வறியவர்களையும், ஏழைகளையும் சேர்ந்து உன் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு நேரம் சாப்பிடு!

சிக் மதம்:

நீ பணக்காரனாக இருந்தால் ஏழைகளை அழைத்து ஒன்றாக சாப்பிடு! நீ பணக்காரனாக இருந்து கொண்டு நீ மட்டும் சாப்பிட்டு விட்டு ஏழைகளை பட்டினி போடாதே!

கிறிஸ்தவம்:

பணம் படைத்தவர்களிடம் பணம் பெற்று கிறிஸ்துவின் பெயரால் ஏழைகளுக்கு உணவளி!

பௌத்தம்:

புத்தனின் பெயர் சொல்லி வாறவர்களை அன்போடு ஆணை அவர்களுக்கு பசியோ தாகமோ எடுத்தால் இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு சற்றேனும் உணவும் தாகத்துக்கு தண்ணீரும் உறங்குவதற்கு இடமும் குடு!

இதில் எல்லா வர்க்கத்திலும் இன்றைய உலகம் எப்படி மாறி நடக்கிறது என்று சற்று எண்ணி பாருங்கள்.
- சிவம் கண்டர்

No comments:

Post a Comment